வடமாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் காரியாலயத்தில் புத்தாண்டு நிகழ்வுகள்

IMG 20210101 WA0049
IMG 20210101 WA0049

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் காரியாலயத்தில் 2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ணவின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சத்தியபிரமாணமும் எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகளை பெற்று வடக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்த யாழ் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் மாணவி சுபாஷ்கரன் யனுஷ்காவிற்கு பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.