இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

rain30
rain30

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்று பிற்பகல் 1.00 மணியின் பின் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் சபரகமுவ மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தற்காலிகமாக வீசக்கூடிய அதிவேக காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள உாிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.