புதிய வகை கொரோனா தொற்று நாட்டுக்குள் பரவாதிருக்க நடவடிக்கை-இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே!

Screenshot 20201130 183322 UC Mini
Screenshot 20201130 183322 UC Mini

கொரோனா வைரஸின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பாக தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவாதிருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக ஆய்வு கூடங்களில் விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதா இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே குறிப்பிட்டுள்ளார்.