மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கி ஊழியர் ஒருவருக்கு கொரோனா!

625.500.560.350.160.300.053.800.900.160.90 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 1

மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கி ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டதையடுத்து இன்று சனிக்கிழமை (02) வங்கி தற்காலிகமாக பூட்டப்பட்டு 21 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

குறித்த வங்கில் கடமையற்றும் ஊழியர் ஒருவருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோன தொற்றுதி கண்டறியப்பட்டது.

இதனையடுத்து குறித்த ஊழியரை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்பு பட்ட 21 பேரை தனிமைப்படுத்தியுள்ளதகவும் குறித்த வங்கி தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.