வெலிக்கந்த மற்றும் ரம்பெவ பிரதேச சபை தவிசாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வடமத்திய மாகாண ஆளுர் மஹிபால ஹேரத் விடுத்துள்ள அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பணிநீக்கம் தொடர்பிலான வர்த்தமான அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதேச சபை தவிசாளர்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் காணப்படுமாயின் எதிர்வரும் 3 மாத காலப்பகுதிக்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வடமத்திய மாகாண ஆளுர் குறிப்பிட்டுள்ளார்.