பாடசாலை நிழ்வுகளில் வரையறை

dalas
dalas

பாடசாலைகளில் விளையாட்டு வைபவம் தவிர வேறு எந்த வைபவங்களும் ஒரு மணித்தியாலத்திற்குள் வரையறுக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதற்காக புதிய கல்வி கொள்கைக்கு அமைவான சுற்றறிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“தற்பொழுது பாடசாலைகளின் வகுப்பறைகள் 19ஆம் நூற்றாண்டுக்கு ஒத்ததாக அமைந்துள்ளன. 20ஆம் நூற்றாண்டுக்கான ஆசிரியர்கள் 21 ஆம் ஆண்டுக்கான மாணவர்களுக்கு கல்வியை கற்பிக்கின்றனர்.

அரச பாடசாலைகளில் 60 ஆயிரம் ஆசிரியர்கள் இருக்கின்றனர். இவர்களுள் 15 ஆயிரம் ஆசிரியர்கள் பயிற்சி பெறாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதிய கல்வி கொள்கைக்கு அமைவாக அதற்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.