நாடு பூராகவும் உள்ள விமானப்படை தளங்களில் மேற்கொள்ளப்பட்ட பிரித்து ஓதும் ஆராதனை நிகழ்வு!

IMG 3390
IMG 3390

இலங்கை விமானப் படைத்தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷன பதிரண ஆலோசனைக்கு அமைய விமானப்படையின் பிரித்து ஓதும் ஆராதனை நிகழ்வு இன்று நாடு பூராகவும் உள்ள விமானப்படை தளங்களில் மேற்கொள்ளப்பட்டது.

புதிய வருட பிறப்பினை முன்னிட்டும், நாட்டிலுள்ள மக்களுக்கு சாந்தி சமாதானம் நிகழ வேண்டும் என்றும் தற்போதுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு குறித்த பிரித்து ஓதும் ஆராதனை முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைவாக இன்றைய தினம் யாழ்ப்பாண பலாலி விமானப் படைத் தலைமையகத்தில் பிரித்து ஓதும் ஆராதனை பௌத்த பிக்குகளால் மேற்கொள்ளப்பட்டது.

பலாலி விமானப்படைத் தளத்தின் குரூப் கப்டன் ரசங்க சொய்சா தலைமையின் கீழ் குறித்த வைபவம் இடம்பெற்றது.

புனித தீபம் ஏற்றப்பட்டு பிக்குகள் அழைத்துவரப்பட்டு சமாதானம் வேண்டி குறித்த நிகழ்வுகள் இன்று நள்ளிரவு இடம்பெற்றன.