யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம்எதிர்வரும் ஏழாம் திகதி!

20200831 101741
20200831 101741

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை எவ்வாறு கட்டுப்படுதுவது என்பது தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் எதிர்வரும் 7ம் திகதி வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள் ளதாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியும், மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரியுமான மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்தார்

ஜனாதிபதியினால் மாவட்டம்தோறும் கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரிகளாக ராணுவத்தின் உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் மேலும் கொரோனா பரவலைஎவ்வாறு தடுக்க முடியும் என்பது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது

குறித்த கூட்டத்திற்கு பிரதேசசெயலாளர்கள் சுகாதார திணைக்கள பணிப்பாளர், பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.