சுகாதார வழிமுறைகளை மீறி சிலரின் சரீரங்கள் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை!

பேருவளை பகுதியில் உயிரிழந்த சிலரின் சரீரங்கள், சுகாதார வழிமுறைகளை மீறி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளபடாமல் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இவ்வாறு சரீரங்கள் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதால் கொரோனா நிலைமையை கட்டுப்படுத்துவதில் அழுத்தம் ஏற்படக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹண தெரிவித்துள்ளார்.