சூதாட்ட விடுதி சுற்றிவளைப்பு; 07 பேர் கைது

kaithu

வனாத்தவில்லு, மயிலன்குளம் பிரதேசத்தில் வீடொன்றில் இரகசியமான முறையில் நடாத்திச் செல்லப்பட்ட சூதாட்ட விடுதியொன்று நேற்று (03) இரவு காவல் துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டது.

இதன்போது சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 07 பேர் வனாத்தவில்லு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு பணம் மற்றும் சீட்டாட்ட அட்டைகள் சிலவும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தொிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (04) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.