ஹெரோயினுடன் இருவர் கைது

WhatsApp Image 2021 01 04 at 07.48.08
WhatsApp Image 2021 01 04 at 07.48.08

மட்டக்களப்பில் நீண்டகாலமாக  போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த ஏறாவூர், செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதிகள் இருவரை நேற்று (03) இரவு 3 இலட்சம் ரூபா பெறுமதியான 11 கிராம் 200 மில்லிக்கிராம் ஹெரோயினுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.கே. பண்டார தெரிவித்தார்.

இதில் கைது செய்யப்பட்ட இருவரும் ஏறாவூர் மிச்சுநகர், செங்கலடி பிரதேசத்தைச் சேர்நத முச்சக்கரவண்டி சாரதிகள் எனவும் நீணடகாலமாக  போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்டுவருபர்கள் எனவும். இதில் கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.