கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக உள்ள வியாபார நிலையம் ஒன்றின் முன்பாக நாய் ஒன்றின் தோல் நேற்றைய தினம் காணப்பட்டுள்ளது.
இதனை மறுத்துள்ள கடை உரிமையாளர் இந்த நாயின் தோல் பிரிதொரு நாய் அல்லது காகத்தினால் தங்களது கடைக்கு முன்பாக காவி வந்திருக்கலாம் என சந்தேகித்துள்ளனர்.
குறித்த விடயம் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வருகைதந்து அவற்றை பார்வையிட்டுள்ளனர். குறித்த தோலுக்குரிய நாய் வெட்டப்பட்டு இறைச்சி அகற்றப்பட்ட நிலையில் தோல் காணப்படுகிறது என்பதனை உறுதிசெய்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் தாம் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.