விடுதலைப்புலிகளின் தலைவரைப் பற்றி புகழ்ந்து தள்ளிய கமால் குணரத்ன

kamal kunaratne 1
kamal kunaratne 1

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஓர் சிறந்த தலைவர் எனவும், அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணினார் என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன கடந்த வருடம் இடம் பெற்ற புத்தக வெளியீட்டில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அக்கருத்து மக்கள் மத்தியில் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.

மேலும் தொடர்ந்து அவர் தெரிவித்தது,

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த சான்றுமே கிடையாது. அவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். இலங்கை இராணுவத்தினர், பிரபாகரனினதும், அவரது குடும்பத்தினரதும், விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதும், 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர்.

ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை. அவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர். பலரும், கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தது.