தடையையும் மீறி யாழ்.பல்கலை மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி

IMG 20191127 WA0018
IMG 20191127 WA0018

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிருவாகத்தால் தடை விதித்திருடந்த நிலையில் மாணவர்கள் படலையை உடைத்து உள்நுழைந்துள்ளனர்.

மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே இந்த தடையை பல்கலைக்கழக பீடாதிபதிகள் கூடி எடுத்த முடிவிற்கமைய பொறுப்பு வாய்ந்த அதிகாரி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று முற்பகல் 10 மணியளவில் அங்கு கூடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்துள்ளனர்.

அதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் தினைவாலயத்தில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.