மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று காலை யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபி முன்பாக மாவீரர்நாள் அஞ்சலி இடம்பெற்றது.
வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந் நினைவகத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளது
இந் நினைவூட்டல் நிகழ்வில் மாவீரர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.