இடைநிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகளை மீள ஆரம்பிக்க புகையிரத திணைக்களம் தீர்மானம்!

Train
Train

இடைநிறுத்தப்பட்டிருந்த பல்வேறு புகையிரத சேவைகளை மீள ஆரம்பிக்க புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பல்வேறு பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி, பொல்கஹவலை, குருணாகலை பிரதேசங்களுக்கான மந்த கதியிலான புகையிரத சேவைகள் மற்றும் காலி குமாரி, ருஹுணு குமாரி ஆகிய புகையிரத சேவைகள் நாளை மறுதினம் முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

அத்துடன், அளுத்கம அலுவலக புகையிரதம், பெலியத்த விரைவு புகையிரத, அளுத்கமபுகையிரதம் சேவை, புத்தளம் புகையிரதசேவை, அனுராதபுரம் தபால் புகையிரதம் ஆகியனவும், நாளை மறுதினம் முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்த நிலையில், எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் மேலும் 5 புகையிரத சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவும், ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது