சிறைச்சாலை கொத்தணியில் 4 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள்!

unnamed 5
unnamed 5

நாட்டில்  கொவிட்-19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 45 000 ஐ கடந்துள்ளது. எனினும் 38 000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில் இன்று செவ்வாய்கிழமை மாலை 7 மணி வரை 224 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இவர்களில் 38 262 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 6989 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறைச்சாலை கொத்தணியில் 4000 தொற்றாளர்கள்

இன்று செவ்வாய்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் சிறைச்சாலைகளில் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 19 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய இன்று மாலை வரை 4122 கொவிட் தொற்றாளர்கள் சிறைச்சாலைகளில் இனங்காணப்பட்டுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் 867 தொற்றாளர்களும் மெகசின் சிறைச்சாலையில் 839 தொற்றாளர்களும் மஹர சிறைச்சாலையில் 798 தொற்றாளர்களும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 417 தொற்றாளர்களும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் 334 தொற்றாளர்களும் இவ்வாறு அடையாளங்காணப்பட்டுள்ளனர்