கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன – இராணுவத் தளபதி

d
d

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி, அட்டாளைச்சேனை காவற்துறை பிரிவிற்குட்பட்ட பாலமுனை 1, ஒலுவில் 2, அட்டாளைச்சேனை 8 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஆலையடி வேம்பு காவற்துறை பிரிவிற்குட் பட்ட அக்கரைப்பற்று 8இன் கீழ் 1, 8இன் கீழ் 3 மற்றும் அக் கரைப்பற்று 9 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அக்கறைப்பற்று காவற்துறை பிரிவிற்குட்பட்ட அக்கறைப்பற்று 05 ஆம் மற்றும் 14 ஆம் இலக்க கிராம சே வகர் பிரிவுகளும் நகர அதிகாரத்திற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடு விக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.