யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலையில் சடுதியான விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த வாரம் தங்கத்தின் விலையில் சரிவு காணப்பட்டபோதும், கடந்த 3 நாள்களில் தங்கத்தின் விலை ஒரு பவுணுக்கு 3 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளது.
இன்று (6) யாழ்ப்பாணத்தில் ஒரு பவுண் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை 99 ஆயிரத்து 450 ரூபாவாகக் காணப்படுகின்றது.
24 கரட்டு தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 500 ரூபாவாகக் காணப்படுகின்றது.
தற்போது உலகளாவிய ரீதியில் காணப்படும் கொரோனா தொற்று நிலைமை தங்கத்தின் விலை உயர்வுக்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றது.