கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர் வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள அங்காடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வர்த்தக நிலையம் ஒன்றில் சிகரட், வெற்றிலை பொதி, மற்றும் இனிப்புக்களை கொள்வனவு செய்த நிலையில் கைது செயப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் கொடுக்கல் வாங்கள்களை மேற்கொண்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான பெண் ஒருவர், அவரின் தந்தை உள்ளிட்ட சிலரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.