இலங்கையில் மேலும் 269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

202006170725193058 Tamil News COVID19 US Scientists found New treatment to cure people SECVPF
202006170725193058 Tamil News COVID19 US Scientists found New treatment to cure people SECVPF

இலங்கையில் மேலும் 269 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்றைய தினத்தில் இதுவரை 521 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, திவுலப்பிட்டிய, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 42,498 ஆக அதிகரித்துள்ளது.