முகக்கவசம் அணியாது நடமாடிய 2 ஆயிரத்து 25 பேருக்கு கொரோனா பரிசோதனை

202005270305300958 Another 1 lakh lakh RTPCR Testing equipment arrived to SECVPF 1
202005270305300958 Another 1 lakh lakh RTPCR Testing equipment arrived to SECVPF 1

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாது நடமாடிய 2 ஆயிரத்து 25 பேருக்கு ரெபிட் எண்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இதுவரையில் 24 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியான 24 பேரில் 19 பேர் ரெபிட் எண்டிஜன் பரிசோதனைகளிலும், எஞ்சிய 5 பேர் பீ.சி.ஆர் பரிசோதனைகளிலும் கண்டறியப்பட்டதாகவும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.