நாடு முழுவதும் மழையுடனான வானிலை இன்று இரவிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் – வளிமண்டல வியல் திணைக்களம்

rain 768x384 1
rain 768x384 1

இலங்கைக்கு தென்கிழக்காக வளிமண்டலத்தில் ஏற்பட்ட கீழ் மட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலை இன்று இரவிலிருந்து அடுத்த சில நாட்களுக்குச் சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா,வடமேற்கு, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.