எதிர்க்கட்சித்தலைவரை தீர்மானிக்கும் முக்கிய கூட்டம் இன்று

sajith ranil karu
sajith ranil karu

எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து தீர்மானிக்கும் முக்கிய கூட்டமொன்று இன்று மாலை இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் தீர்மானத்துக்கமையவே எதிர்க்கட்சித் தலைவர் தீர்மானிக்கப்பட வேண்டும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இந்தநிலையிலேயே குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.