கம்பஹா மாவட்டத்தின், வத்தளை காவல்துறை அதிகார பிரிவின், வெலிக்கடமுல்ல கிராம சேவகர் பிரிவின் துவ வத்த, கிரிபத்கொடை காவல்துறை அதிகார பிரிவின் ஹுணுப்பிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவின் வெடிகந்த மற்றும் நீர்கொழும்பு காவல்துறை அதிகார பிரிவின் தல்துவ கிராம சேவகர் பிரிவின் எம்.சி வீடமைப்பு யோசனைத் திட்டம் என்பன நாளை அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.