கொரோனா தொற்றுறுதியான நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பில் இருந்த மேலும் 08 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவும், சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அவருடன் நெருங்கிய தொடர்பை பேணிய 07 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவும், சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.