யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து தகர்க்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து, நாளைய தினம் நடத்தப்படவுள்ள வடக்கு, கிழக்கு தழுவிய நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு முஸ்லிம்களும் தங்களது முழு ஆதரவை தெரிவிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இருகட்சிகளினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யப்படுவதும், இவ்வாறு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து தகர்க்கப்பட்டமையும் நடப்பு அரசாங்கத்தினால் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் திட்டமிடப்பட்ட நடவடிக்கை என அந்த அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.