யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள மாணவர்களின் கையொப்பம் இடப்பட்ட மகஜர் ஒன்றை கையளிப்பதற்காகவும், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவும், துணைவேந்தரை இன்று இரவு சந்தித்திருந்தனர்.
சந்திப்பில் கலந்துகொண்ட மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.