ஓட்டமாவடியில் அன்டிஜன் பரிசோதனை; மேலும் ஒருவருக்கு கொரோனா

01 6 3
01 6 3

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒரு கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்கனவே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களது உறவினர்கள் மற்றும் வீதிகளில் சுகாதார நடைமுறையை பேணாமல் முகக் கவசம் அணியாது பயணிக்கும் நபர்களுக்கு எழுமாறாக தொன்னூறு (90) பேருக்கு செய்யப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிப்பதனை தடுக்கும் நோக்கில் பிரதேச செயலகம், பிரதேச சபை, இராணுவத்தினர், காவல்துறையினர், வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் சுகாதார தரப்பினருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் மேலும் தெரிவித்தார்.