இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜெயசேகர, ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரா ஆகியோருக்குப் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரானா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து குறைந்தது 31 உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.