மேலும் பத்து சிறை கைதிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஆண் சிறை கைதிகள் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 140 ஆக உயர்ந்துள்ளது.
இது தவிர 129 அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.