சமூக வலைத்தள பாவனையாளர்களுக்கு அதிர்ச்சி!

facebook company
facebook company

இலங்கை உட்பட உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்ற வகையில் சமூக வலைத்தளங்களான முகநூல், இன்ஸ்டாகிராம், வட்ஸ் அப் என்பன முடக்கம் அடைந்துள்ளது.

முகநூல் குடும்பத்தை சேர்ந்த இன்ஸ்டாகிராம், வட்ஸ் அப் ஆகிய மூன்று முக்கிய ஆப்கள் செயலிழந்து போய் இருக்கிறது. சில மணி நேரங்களாக இந்த ஆப்கள் வேலை செய்யாமல் பிரச்சனை செய்து வருகிறது.

இலங்கை, இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா, ஐயர்லாந்து, அவுஸ்திரேலியா, தெற்காசியாவில் பல நாடுகள், என்று நிறைய இடங்களில் இந்த மூன்று அப்களும் வேலை செய்யாமல் முடங்கி இருக்கிறது. நீண்ட நேரம் இந்த பிரச்சனை நீடித்து வருகிறது.

அதேபோல் முகநூல் மெசேஞ்சர், முகநூல் லைட் ரக அப்கள், விர்ச்சுவல் ரியாலிட்டி சாதனமான Oculus ஆகியவையும் செயல்படவில்லை. இந்த முகநூல் குடும்ப அப்கள் வேலை செய்யாமல் போனது மக்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இது தொடர்பாக முகநூல் நிறுவனம் விசாரித்து வருகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்று முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.