மாலைதீவு முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை

abdulla yameen
abdulla yameen

நிதி மோசடி தொடர்பான வழக்கில் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனுக்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அவரது ஆட்சிக் காலத்தில் ஹோட்டல் அபிவிருத்திக்காக தீவுகள் பலவற்றை தனியார் நிறுவனம் ஒன்றிற்கு குத்தகைக்கு விட்டு ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை மோசடி செய்துள்ளதாக தெரிவித்து வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது .

விசாரணைகளின் அடிப்படையில் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதிக்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.