பிள்ளையானின் சகாக்கள் விரட்டியடிப்பு

kallady
kallady

மட்டக்களப்பின் கல்லடிப் பிரதேசத்தில் மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்க முயன்ற பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்களை (TMVP)பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் விரட்டி அடித்துள்ளனர்.

கல்லடி மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் உள்ள காணியில் நினைவுத்தூபி ஒன்றை அமைந்து மாவீரர் தினத்தை அனுட்டித்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த இடத்தில் நடாத்த தமிழ் மக்கள் விடுதலிப் புலிகள் (TMVP) கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் வேலூரான் சுபராஜ் தலைமையில் ஒழுங்குகளை மேற்கொண்டிருந்த போது கல்லடி பிரதேச மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது கல்லடி மக்களுக்கும் மக்கள் விடுதலிப் புலிகள் கட்சியினருக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பொலிஸார் அவ்விடத்துக்கு வருகை தந்து சகலரையும் அவ்விடத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர்.