ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று பிற்பகல் இந்தியாவிற்கு பயணமானார்.
ஜனாதிபதியுடன் 10 பேர்கொண்ட குழு ஒன்றும் பயணமாகியுள்ளது.
இதன்போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஜனாதிபதி கோட்டாபய பயணிகளுடன் சர்வசாதாரணமாக எந்தவொரு சிறப்புரிமையும் பெறாது சென்றமை பலருக்கும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதியின் இவ்வாறான செயற்பாடுகளிற்கு வரவேற்பளித்துள்ள மக்கள் இந்நிலை தொடர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.