தனியார் துறையினருக்கான சலுகை காலம் நீடிப்பு

அனுமதி
அனுமதி

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் இணக்கம் காணப்பட்ட கால எல்லையை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதியுடன் நிறைவு செய்யப்படவிருந்த சலுகை காலத்தை எதிர்வரும் மார்ச் மாதம் இறுதி வரை நீடிப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.