நாடாளுமன்ற ஊழியர்களுக்காக 250க்கும் அதிகமான பிசிஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் கூறுகின்றன.
இதன்படி நாடாளுமன்ற வளாகத்தில் நாளை மீண்டும் பிசிஆர் சோதனை நடத்தப்படவுள்ளது.
இதனிடையே இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவுக்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு வைரஸ் தொற்றில்லை என்ற முடிவு வந்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.