12 மில்லியன் ரூபா பணத்துடன் இருவர் கைது

kaithu

கிரான்பாஸ் பகுதியில் வைத்து ஒரு தொகை பணத்துடன் இருவரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்யதுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 12 மில்லியன் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுள் சிறையில் உள்ள பாதாள உலக குழு உறுப்பினரான மொஹமட் சித்தீக் என்பவரின் உதவியாளர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.