மான் இறைச்சியுடன் ஐவர் கைது

kaithu

வேட்டையாடப்பட்ட நிலையில் மான் இறைச்சியை வைத்திருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன ஜீவராசிகள் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் மேலும் 7 பேர் தப்பிச்சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் இராணுவ வீரர்கள் மூவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2.5 கிலோகிராம் உலர்ந்த மான் இறைச்சியும், 58 கிலோகிராம் மான் இறைச்சியும், உந்துருளி ஒன்றும், கத்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.