இலங்கையில் மேலும் 378 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 4
1 4

இலங்கையில் மேலும் 378 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்றைய தினத்தில் இதுவரை 687 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 50,226 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை 43,267 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.