இலங்கை கடற்படையின் பிரதானியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளைய தினம் ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பெறுப்பேற்கவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் இந்திக டிசில்வா தெரிவித்துள்ளார்.
சுமித் வீரசிங்க தனது புதிய நியமனத்திற்கு முன்னர் மேற்கு கடற்படைத் தளத்தின் தளபதியாகவும், கடற்படையின் துணைத் தளபதியாகவும் பணியாற்றியுள்ளமையும் குறிப்பிடத்கத்கது.