நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் பி.சி.ஆர் முடிவுகள் வெளியானது

கடந்த புதன்கிழமை (13) நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் மீது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, குறித்த அனைவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என இலங்கை நாடாளுமன்றம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 13 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 463 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக இன்று (15) காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.