சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4282 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று காலை கொரோனா தொற்றுறுதியாளர்கள் 8 பேர் இனங்காணப்பட்டதுடன் இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 2 சிறை கைதிகள் மற்றும் 2 சிறைச்சாலை உயர் அதிகாரிகள் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் சிறைச்சாலை கொத்தணியில் குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3868 ஆக காணப்படுகின்றது.