மிஹிந்தலை குறுந்தக்குலம பிரதேசத்தில் சுற்றுலா விடுதியொன்றை சுற்றிவளைத்ததில் விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 வயதுடையவர்கள் இருவர் மற்றும் 32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் பாணந்துறை குருணாகல் மற்றும் மீரிகம போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த பெண்கள் மூவர் மற்றும் இரு சந்தேக நபர்களை நிதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு காவல்துறையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணை மிஹிந்தலை காவல்துறையினரால் மேற்கொள்ளப்படுகின்றது.