சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத 213 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Tamil News large 2638529
Tamil News large 2638529

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாத 213 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தொிவித்தார்.

இதேவேளை, நேற்று மேற்கொள்ளப்பட்ட இச்சுற்றிவளைப்பின் போது 1,311 நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.