மேலும் 208 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

gh 11
gh 11

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 208 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.

அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 50 பேர், மாலைத்தீவிலிருந்து 50 பேர், கட்டாரிலிருந்து 45 பேர் மற்றும் இந்தியாவிலிருந்து 63 பேர் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.