பொருளாதார வளர்ச்சியை விரைவு படுத்துவதற்கான புதிய இலக்குகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது, இது கடன் வாங்குவதற்கான எந்தவொரு தேவையையும் உருவாக்காது, இது இப்போது மீட்பு பாதையில் உள்ள நாட்டின் கடன் கூறுகளை மட்டுமே அதிகரிக்கும் என்று இராஜாங்க நிதி அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.
சமீபத்திய ஆண்டுகளில் நாடு மிக மோசமான புயல்களைக் கடந்து விட்டதால், வெளிநாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து நிதியுதவி பெற வேண்டிய அவசியமில்லை என்றும், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கான சிறந்த கொள்கைகளின் ஆதரவுடன் மீட்கும் பாதையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் ஊக்குவிப்பதில் நாங்கள் கவனம் செலுத்துவோம், இது வேலைவாய்ப்பு மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துவதில் இது பங்களிப்புச் செய்யும் என்பதுடன் கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கான வெளிநாட்டு முதலீடுகள் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாலும், சுற்றுலாத் துறையின் புத்துயிர் பெறுவதாலும், வெளிநாட்டு பணம் அனுப்புவதில் முன்னேற்றம் இருப்பதாலும் இலங்கை தனது கடனை வசதியாக தீர்க்க முடியும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார் .