வடக்கு ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியது

yaldevi
yaldevi

வடக்கிற்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு பின்னர் இன்று அதிகாலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத மேலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 27ம் திகதி வடக்கு ரயில் பாதையின் அம்பன்பொல கல்கமுவிற்கு இடைப்பட்ட பகுதியில் ரயில் தடம் புரண்டமையினால் இரண்டு நாட்களாக வடக்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.