இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிற்கிடையிலான பேச்சுவார்த்தையினை அடுத்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்ததாகவும் பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாக இதன் போது தெரிவித்துள்ளார்.