1,559 கிலோ கிராம் மஞ்சள் மீட்பு!

OIP 9
OIP 9

கொழும்பு, தெமட்டகொட பகுதியில் 1,559 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் காவற்துறை விசேட அதிரடைப் படையினரால் நேற்றிரவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மஞ்சள் கொண்டு செல்ல பயன்படுத்திய லொறியொன்றையும் காவற்துறை விசேட அதிரடைப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சளானது சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக காவற்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.